search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பலாத்கார முயற்சி"

    திருச்சி அருகே காதலி பலாத்கார முயற்சியை தடுத்த காதலன் படுகொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மண்ணச்சநல்லூர்:

    திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள சின்னக்குளம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன், வியாபாரி. இவரது மகன் தமிழ்வானன் (வயது 22). சமயபுரத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார்.

    இவருக்கும் லால்குடி அருகே உள்ள கோதண்ட குறிச்சியை சேர்ந்த ஒரு நர்சிங் மாணவிக்கும் நீண்ட காலமாக காதல் இருந்து வந்தது. இருவரும் அடிக்கடி தனியே சந்தித்து பேசி தங்கள் காதலை வளர்த்து வந்தனர்.

    நேற்று பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்வானன் தனது காதலியை சந்திக்க விரும்பினார். உடனே செல்போனில் தொடர்பு கொண்டு தனது விருப்பத்தை தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அந்த நர்சிங் மாணவியும் நேற்று மாலை தமிழ்வாணன் கூறிய இடத்திற்கு வந்தார்.

    இருவரும் மோட்டார்சைக்கிளில் சிறுகனூர் ரோட்டில் குமுளூர் என்ற இடத்திற்கு சென்றனர். அங்கு ஒரு காட்டுப்பகுதியில் இருவரும் தனிமையில் சந்தித்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தனர்.

    காதல் ஜோடி இருவரும் தனிமையில் பேசிக்கொண்டிருப்பதை அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் பார்த்துள்ளது. போதையில் இருந்த அந்த 4 பேரும் மாணவியை பலாத்காரம் செய்யும் முயற்சியில் அங்கு சென்றுள்ளனர்.

    தமிழ்வாணன் மற்றும் மாணவியிடம் யார் நீங்கள், எதற்காக நிற்கிறீர்கள்? என்று கேட்டனர். பின்னர் மாணவியிடம் அவர்கள் தவறாக நடக்க முயன்றுள்ளனர். உடனே தமிழ்வாணன் அவர்களை தடுத்து காதலியை காப்பாற்ற முயன்றார்.

    அப்போது ஆத்திரம டைந்த அந்த கும்பல் தமிழ்வாணனை தாக்கியது. அவர்களிடம் தமிழ்வாணன் போராடியுள்ளார். அப்போது கும்பலில் ஒருவன் கத்தியை எடுத்து தமிழ்வாணன் தொடை மற்றும் உடலில் குத்தினார். இதில் படுகாயமடைந்த தமிழ்வாணன் உயிருக்கு போராடினார். அதிர்ச்சியடைந்த அவரது காதலி காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று அலறினார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக ரோட்டில் சென்றவர்கள் ஓடி வந்தனர். இதைப்பார்த்த அந்த கும்பல் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பியது. அதன் பிறகு 108 ஆம்புலன்ஸ் மூலம் தமிழ்வாணனை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து சிறுகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தமிழ்வாணனின் காதலியிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள். மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேரின் அங்க அடையாளங்கள், பைக் நம்பர் அடையாளம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் முக்கிய தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதன்படி 4 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.

    சம்பவம் நடந்த இடம் லால்குடி-சிறுகனூர் குறுக்கு வழி சாலை பகுதியாகும். நேற்று மாலை அங்கு சென்ற காதல் ஜோடி இரவு 7:30 மணி வரை பேசிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது தான் இந்த கும்பலிடம் சிக்கியுள்ளனர்.

    ஏற்கனவே கடந்த 2015-ம் ஆண்டு சிறுகனூர் அருகே பெண்ணை அழைத்து சென்ற கண்டக்டரை இதே போன்று தகராறு செய்த அப்பகுதி சிமெண்டு ஆலை ஊழியர்கள் 2 பேர் அந்த பெண்ணை அடையும் முயற்சியில் கண்டக்டரை குத்தி கொன்றனர். இப்போது 2-வது சம்பவம் நடந்துள்ளது.

    ஆத்தூர் அருகே பலாத்கார முயற்சியில் 8-ம் வகுப்பு மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக டிரைவர் தினேஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.
    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தளவாய்பட்டி ஊராட்சி சுந்தரபுரத்தை சேர்ந்தவர் சேர்ந்தவர் சாமிவேல் (வயது 48). விவசாயி. இவரது மனைவி சின்னப்பொண்ணு (வயது45).

    இவர்களது கடைசி மகளான ராஜலட்சுமி அருகில் உள்ள தளவாய்பட்டி ஊராட்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். சாமுவேலின் வீட்டின் அருகே குழந்தைவேல் மகன் தினேஷ்குமார் என்ற கார்த்தி (25) என்பவர் வசித்து வருகிறார். இவர் நெல் அறுவடை எந்திரத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளி மாவட்டங்களுக்கு நெல் அறுவடைக்கு சென்று விட்டு ஊர் திரும்பினார். குடிப்பழக்கம் கொண்ட தினேஷ்குமார் கடந்த 3 நாட்களாக போதையிலேயே சுற்றி வந்தார். பள்ளிக்கு சென்ற சிறுமி ராஜலட்சுமியை பின் தொடர்ந்து சென்று கேலி, கிண்டல் செய்வதும், சில்மி‌ஷத்தில் ஈடுபட்டு வந்தார்.

    நேற்று இரவு 7.30 மணி அளவில் வீட்டில் ராஜலட்சுமி மல்லிகை பூ கட்டிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற தினேஷ்குமார் ராஜலட்சுமியை பலாத்காரம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அவரது தாய் சின்னபொண்ணு பதறி அடித்தபடி ஓடி வந்தார்.

    அப்போது தினேஷ்குமார், சின்னபொண்ணுவை கீழே தள்ளிவிட்டு விட்டு கையில் இருந்த அரிவாளால் ராஜலட்சுமியின் கழுத்தை கொடூரமாக அறுத்தார். இதில் ரத்தம் மளமளவென பீறிட்டு வெளியேறியது.

    பின்னர் தலையை தனியாக துண்டித்து எடுத்தார். இதில் ராஜலட்சுமி துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். உடலை வெளியே இழுத்து சென்றார். இதை பார்த்த அவரது தாய் கதறி அழுதபடி ஓடினார். பின்னர் ரத்தம் ரத்தம் சொட்ட சொட்ட துண்டித்த தலையை தளவாய்பட்டி- சுந்தராபுரம் சாலையின் நடுவே வைத்து விட்டு தினேஷ்குமார் தப்பி ஓடினார்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆத்தூர் டி.எஸ்.பி. பொன் கார்த்திக்குமார், இன்ஸ்பெக்டர் கேசவன், மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    பின்னர் சிறுமியின் உடல், தலையை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தினேஷ்குமாரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மாணவி ராஜலட்சுமி, தினேஷ்குமார் மனைவியுடன் நெருக்கமாக பழகி வந்தார். அவர் வீட்டிற்கு சென்று, பூக்கள் பறித்து வருவது வழக்கம். கடந்த 3 நாட்களாக வீட்டில் இருந்த தினேஷ்குமார், மாணவியிடம் தொந்தரவு செய்ததாக தெரிகிறது. சைகோ போல சுற்றி திரிந்த தினேஷ்குமார் நேற்று மாணவியின் வீட்டிற்கு சென்று பாலியல் தொந்தரவு செய்ததுடன் மறுத்த அவரை கழுத்தை அறுத்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரித்து வருகிறோம் என்றனர்.

    தினேஷ் குமாரின் மனைவி சாரதா கூறியதாவது:-

    நெல் அறுவடை எந்திரம் வாங்க கடனுதவி கிடைக்காததால் தஞ்சாவூரில் நெல் அறுவடை எந்திர டிரைவர் வேலைக்கு தினேஷ்குமார் சென்றார். அங்கு உடன் வேலை பார்த்து தொழிலாளர்களிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். மேலும் அடிக்கடி கோபத்தில் ஆவேசமாக தகாத வார்த்தைகளால் திட்டினார்.

    அங்கு கொட்டகையில் தங்காமல், சில மாதங்களாக இரவில் சுடுகாட்டில் தூங்கியதால் இந்த நிலை வந்ததாக தினேஷ்குமார் கூறி வந்தார். இதனால் ஆத்தூரை சேர்ந்த வாகன உரிமையாளர் ராமு அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தார். நீ மேலும் நீ மருத்துவ மனைக்கு சென்று சிகிச்சைப் பெற்று வா என்று அவர் கூறி உள்ளார்.

    10 நாட்களுக்கு முன்பு வீட்டிற்கு வந்த தினேஷ்குமார் நான் தான் ‘முனி’ என்று கூறி சாமி ஆடினார். சுடுகாட்டில் படுத்ததால் எனக்கு பேய், பிசாசுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது என்றும், வி‌ஷம் குடித்து இறந்தவர்கள், கிணற்றில் விழுந்து இறந்தவர்கள் பெயரையும் கூறி வந்தார்.

    அப்போது பக்கத்து வீட்டில் வசித்து வரும் ராஜலட்சுமி எங்கு இருக்கிறார். உடனே இங்கு வரச் சொல். நான் அவரை பார்க்க வேண்டும் என கூறினார். உடனே நாங்கள், தினேஷ்குமாரின் முகத்தில் தண்ணீரை தெளித்து, சத்தம் போடாமல் ஒழுங்காக இருக்கும்படி கூறினோம்.

    சைக்கோ போல் சுற்றி வந்த அவர் ஆவேசமாக பேசியதுடன் உறவினர்களை அடிக்கவும் போவார். வாயில் வந்தபடி திட்டினார். இந்த நிலையில் எனது கணவர் மாணவி ராஜலட்சுமியை கொலை செய்து விட்டு வீட்டுக்கு வந்த பின்பு தான் எனக்கு இது பற்றி தெரியும். இதனால் அதிர்ச்சியில் உறைந்த நானும், எனது கணவரின் தம்பியும் சேர்ந்து தினேஷ்குமாரை பிடித்து போலீசில் ஒப்படைத்தோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.



    வேலை விஷயமாக கோவாவுக்கு அழைத்துச் சென்று பெண்ணை கற்பழிக்க முயன்றதால் கேரள கம்யூனிஸ்டு செயலாளரை போலீசார் கைது செய்தனர். கட்சி பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரம் அருகே உள்ள மங்களாபுரம் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளராக பணியாற்றி வந்தவர் வினோத். இவர் முன்னாள் கவுன்சிலர் ஆவார்.

    மங்களாபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் தனக்கு வேலை வாங்கி தரும்படி கேட்டு இவரை அணுகினார். அவரும் போர்ச்சுக்கல் நாட்டில் அந்த பெண்ணுக்கு வேலை வாங்கி தருவதாக உறுதி அளித்தார்.

    அதன்பிறகு வேலை வி‌ஷயமாக சிலரை சந்திக்க வேண்டும் என்று கூறி அந்த பெண்ணை கோவாவுக்கு வினோத் அழைத்துச் சென்றார். அங்கு ஒரு ஓட்டலில் தனித்தனி அறை எடுத்து அவர்கள் இருவரும் தங்கினார்கள்.

    இரவு நேரத்தில் அந்த பெண்ணின் அறைக்குள் வினோத் அத்துமீறி நுழைந்து அந்த பெண்ணை கற்பழிக்க முயன்றார். இதனால் பயந்து போன அந்த பெண் கூச்சல் போட்டார். அவரது சத்தம் கேட்டு ஓட்டல் ஊழியர்கள் அங்குச் சென்று விசாரித்தனர். அப்போது நடந்த விவரங்களை அவர்களிடம் அந்த பெண் கூறினார்.

    உடனே இது பற்றி போலீசுக்கு ஓட்டல் ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்குச் சென்று விசாரணை நடத்தி வினோத்தை கைது செய்தனர். மேலும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் 14 நாள் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    இதற்கிடையில் இந்த தகவல் கேரளாவில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கம்யூனிஸ்டு கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்பில் இருந்தும் வினோத் அதிரடியாக நீக்கப்பட்டார்.

    வினோத் கவுன்சிலராக பணியாற்றிய போதும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர். மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரனின் ஆதரவாளர் என்பதால் அவருக்கு கட்சியில் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
    ×